Thursday 24 September 2015

அழகி

செல்கின்ற இடமெல்லாம் 
தன்னைத் திரும்பிப் பார்க்க 
சுவட்டை விட்டு செல்கிறாள்
மை இட்ட அழகி

நகவெட்டி

கூர் முனைகள் ஒன்று சேர 
பிரிந்துப் போனது பிறைநிலவு
தன் வானை விட்டு....

Friday 18 September 2015

பறை

யார் அடித்தாலும்
வாங்கிக்கொண்டு
பதிலுக்கு
சத்தத்தை மட்டுமே எழுப்பும்